Ethirneechal: உண்மை முகத்தை காட்டிய அன்புக்கரசி.... மிரட்டலில் ஆடிப்போன தர்ஷன்
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் அன்புக்கரசியை வேண்டாம் என்று நினைத்திருந்த நிலையில், இதுவரை வாய் பேசாமல் இருந்தவர் தற்போது தர்ஷனை பயங்கரமாக மிரட்டியுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் முடங்கி இருந்த பெண்கள் தற்போது குணசேகரன் சம்மதத்துடன் ஹோட்டல் தொழிலில் கலக்கி வருகின்றனர்.
தர்ஷனுக்கு அன்புக்கரசியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ள நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளது ஒட்டுமொத்த ஆண்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தர்ஷனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அறிவுக்கரசி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தர்ஷனுடன் அன்புக்கரசி கல்லூரிக்கு வந்துள்ள நிலையில், அவரிடம் அறிவுக்கரசியைப் போன்றே பயங்கரமாக பேசி மிரட்டியுள்ளார்.
அன்புக்கரசியின் உண்மை முகத்தை அறிந்த தர்ஷன் பேரதிர்ச்சியில் காணப்படுகின்றார். ஆனால் பாத்ரூமில் வெளியே காத்திருக்கும் அவரை ஏமாற்றிவிட்டு, எஸ்கேப் ஆக தர்ஷன் திட்டமிட்டுள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |