Ethirneechal: அறிவுக்கரசியிடம் தஞ்சமடைந்த கதிர்... ஜனனியை நேருக்கு நேர் சந்தித்த கௌதம்
எதிர்நீச்சல் சீரியலில் கதிர் தலைமறைவாகியுள்ள நிலையில், வீட்டில் உள்ளவர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் தற்போது வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர். மேலும் அவரவர் தொழிலிலும் முன்னேறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
கதிர் குணசேகரனின் சொத்துக்களை அடமானம் வைத்து அந்த பணத்தை வட்டிக்கு விட்டு வருகின்றார். தற்போது குணசேகரனுக்கு பணம் தேவைப்படுவதால் கதிர் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் கதிரை வலைவீசி தேடும் நிலையில், அவர் அறிவுக்கரசி வீட்டில் இருக்கின்றார். மேலும் ஜீவானந்தம் வீடு இல்லாமல் நின்ற பெண்களுக்கு வீடு ஒன்றினை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
வீட்டின் சாவியை கொண்டு வந்தது கௌதம். கௌதமைக் கண்ட அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |