Ethirneechal: வீட்டிற்குள் நுழைந்த குணசேகரன்... ஒட்டுமொத்தமாக வெளியேறிய பெண்கள்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டிற்குள் நுழையும் நிலையில், வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
ஆனால் அப்பொழுது அடங்கியிருந்த வீட்டு பெண்கள் தற்போது எதிர்த்து நிற்கின்றனர். குணசேகரனுக்கு எதிராக இருந்த தம்பிகள் அனைவரும் அவருடன் சேர்ந்துள்ளனர்.
சக்தியும் ஜனனிக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், குணசேகரனும் வீட்டிற்குள் நுழைகின்றார். இந்நிலையில் குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
அதாவது குணசேகரன் வீட்டில் கால் வைக்கும் தருணத்தில் வீட்டில் உள்ள மருமகள்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனால் அடுத்து குறித்த கதையில் நடக்க இருப்பது என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |