Ethirneechal: பறிப்போன உயிர்.. பதற்றத்தில் கல்யாண மாப்பிள்ளை- பொங்கிய அன்புக்கரசி
“இப்போ நீங்க பிரச்சினை பண்ணுறீங்களா?” என கோபத்தில் அன்புக்கரசி பொங்க ஆரம்பிக்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார். இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருக்கிறார்.
இவ்வளவு நாட்களாக ஜீவானந்தம், பார்கவி இருவரையும் கொலைச் செய்வதற்காக குணசேகரன் தான் ஆள் அனுப்பியதாக காட்டப்பட்டது. ஆனால் அறிவுக்கரசி இருவரும் இறந்த செய்தியை கேட்ட பொழுது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்படியென்றால் குணசேகரனுக்கு தெரியாமல் அறிவுக்கரசி பார்த்த வேலை தான் இது.
மொத்தமாக உடைந்த மாப்பிள்ளை
இந்த நிலையில், உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிக் கொண்டிருந்த பார்கவி, ஜீவானந்தம் இருவரில் ஜீவானந்தம் மீது துப்பாக்கி குண்டு துளைத்துள்ளது.
அதன் பின்னர் ஜீவானந்தத்தால் நகர முடியாமல் ஒரு ஆற்றில் ரத்தம் வடிய மயங்கி கிடக்கிறார். பார்கவியால் அவரை காப்பாற்ற முடியவில்லை, இதனை பார்த்த பார்கவி, “ எல்லாம் என்னால் தான்..” கதறியழுகிறார். இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில் இரண்டு உயிரும் பிரிந்து விட்டதாக செய்தி கேட்ட தர்ஷன் துயரம் தாங்க முடியாமல் தரையில் படுத்து அழுகிறார்.
அதனை பார்க்கும் அன்புக்கரசி,“ உங்க சித்திமார்கள் தான் இதுவரையில் பிரச்சினையாக இருந்தார்கள். இப்போ நீங்க ஆரம்பிக்கிறீங்களா?” என கோபமாக கேட்கிறார்.
இரண்டு உயிர் பிரிந்த சம்பவம் சக்தி காதுகளுக்கு வருகிறது. அவர் தொடர்ந்து என்ன செய்யப்போகிறார். இரண்டு உயிர்களில் ஜனனியும் வருவாரா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |