மூன்று சதம்.. 498 ரன்கள் விளாசல்... உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி - கதிகலங்கிய நெதர்லாந்த்!
இங்கிலாந்து அணி நெதர்லாந்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் முதல் போட்டி இன்று நடைப்பெற்றது.
அதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது தான் நெதர்லாந்து எடுத்த மோசமான முடிவு என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.
அதன் படி தொடக்க வீரரான ஜேசன் ராய் ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேற அதன் பின்னர் வந்த பில் சால்ட் மற்றும் டேவிட் மாலன ஜோடி இணைந்து நெதர்லாந்து அணியின் பவுலர்களை அலறவிட்டனர்.

சாதனை படைத்த இங்கிலாந்து
இருவரும் சதம் விளாசி 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 222 ரன்கள் விளாசியது. அதன் பின்னர் தான் களத்துக்கு வந்தார் ஜாஸ் பட்லர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பட்லர், 5 சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசிய அவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அதன் பின்னர் அதிரடியை மீண்டும் காட்ட 65 பந்துகளில் 150 ரன்களை விளாசினார். டிவில்லியர்சின் சாதனையை 1 பந்தில் பட்லர் தவறவிட்டார். பட்லருடன் ஜோடி சேர்ந்த லியான் லிவிங்ஸ்டோன் 17 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

பட்லரின் சாதனை
இதனைத்தொடர்ந்து 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் எடுத்துள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
மேலும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் பட்லர் 70 பந்துகளில் 162 ரன்கள் 14 சிக்சர்கள் 7 பவுண்டரிகளும் அடங்கும். அதன்படி, சால்ட் 122 ரன்கள், மாலன் 125 ரன்கள், லிவிங்ஸ்டன் 66 ரன்கள் என மூன்று சதங்களை இங்கிலாந்து அணி அடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

தொடர்ந்து விளையாடி வரும் நெதர்லாந்து அணி 175 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது . மொயின் அலி 3விக்கெட்டுகளை எடுத்துள்ளார். என மிகப்பெரிய சாதனையை படைத்து அபார வெற்றியை பதிவு செய்ய இருக்கிறது.