காலை வெறும்வயிற்றில் கசப்பான இரண்டு வேப்பிலை சாப்பிடுங்க.. கண்கூடாக தெரியும் அதிசயம்
வெறும்வயிற்றில் தினமும் இரண்டு, மூன்று வேப்பிலையை மென்று சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்து கொள்வோம்.
வேப்பிலை
பொதுவாக வேப்பிலை கசப்பு தன்மை கொண்டதாகும். கசப்பான உணவுகளை மனிதர்கள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை.
பாகற்காய், வேப்பிலை போன்றவை கசப்பாக காணப்பட்டாலும் இதில் எண்ணற்ற நன்மையினை நாம் பெற முடியும். அந்த வகையில் தினமும் வெறும் வயிற்றில் 2 கறிவேப்பிலை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் பல மாற்றத்தினை காணலாம்.
வேப்பிலை கிருமி நாசினியாகவும், அழற்கு எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மருத்துவ குணம் நிறைந்த மூலிகை ஆகும்.
பொடுகு தொல்லையை குணமாக்கவும், அம்மை நோய்க்கு சிறந்த மருந்தாகவும், கொசுக்கலை விரட்டவும் செய்கின்றது.
இதனை வெறும்வயிற்றில் தினமும் இரண்டு இலைகள் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளை பெற முடியும்.

நன்மைகள் என்ன?
தினமும் வெறும் வயிற்றில் வேப்பிலையை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும்.
சருமத்தை பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கின்றது. சருமத்தில் உள்ள பருக்களையும் அடியோட நீக்கவும் உதவுகின்றது.

வயிறு சம்பந்தமான பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். அதாவது உங்களது செரிமான அமைப்பு நன்கு பலப்படுமாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை, பாகற்காய் சிறந்த தீர்வை அளிக்கின்றது. வேப்பிலையை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் போது நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்குமாம்.
வயிற்றில் ஏற்படும் நாடா புழுக்களை அழிக்கவும் வேப்பிலை பயன்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |