எரிமலை குழம்பில் முட்டை சமையல்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்! தீயாய் பரவும் தகவல்
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலைக் குழம்பில் இறைச்சி, முட்டை சமைத்த விவகாரம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பக்ரடல்ஸ்ஜால் எரிமலை கடந்த 800 ஆண்டுகளில் முதல் முறையாக மார்ச் 19ஆம் தேதி வெடித்து எல்லா திசைகளிலும் எரிமலை குழம்பை கக்கி வருகிறது. எரிமலை வெடிப்பு காரணமாக ஐஸ்லாந்தின் சில பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
எரிமலை வெடிப்பதற்கு முன் நான்கு வாரங்களில் 40000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எரிமலைக் குழம்பில் ஒருவர் பன்றி இறைச்சியும், முட்டையும் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. ஆனால், இறைச்சி, முட்டை மட்டுமல்லாமல் கடாயையும் சேர்த்து எரிமலைக் குழம்பு எரித்துவிட்டது.