கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம்
கோடை காலத்தில் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பழங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், உடம்பில் 70 சதவீதம் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டுமாம்.
அவ்வாறு நீர்ச்சத்து இல்லையெனில் தலைவலி உட்பட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மூளையை அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைப்பதற்கு மிக முக்கியம் தண்ணீர் ஆகும்.
நாம் கோடை காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில பழங்களைக் குறித்து இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

கோடையில் சாப்பிட வேண்டிய பழங்கள்
கோடை காலத்தில் உடல் மற்றும் மூளையை குளிர்ச்சியாக வைப்பதற்கு தர்பூசணி உதவுகின்றது. நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் தர்பூசணி, மூளையில் உள்ள ரத்த நாளங்களை தளர்த்துவதுடன், ஒற்றைத் தலைவலி, பொதுவாக தலைவலியை குறைக்கின்றது.

மூளையை குளிர்விக்கும் மற்றொரு பழமாக மஸ்க் மெலன் இருக்கின்றது. வைட்டமின் ஏ, சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வியர்வை மூலமாக இழக்கப்படும் எலக்ரோலைட்டுகளை ஈடுசெய்யயும் உதவுகின்றது. தசைவலி மற்றும் கடுமையான தலைவலியை குறைக்கவும் உதவுகின்றது.

உடல் வெப்பத்தினை உண்டாக்கும் என்பதால் வாழைப்பழத்தினை பலரும் சாப்பிடுவதை கோடை காலத்தில் தவிர்க்கின்றனர். ஆனால் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் மூளையை சுறுசுறுப்பாக வைக்கின்றது. மன அழுத்தத்தினையும் குறைக்கின்றது.

கருப்பு திராட்சை மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும். மூளை செல்களை பாதுகாக்க உதவுகின்றது. திராட்சையில் இயற்கையான சர்க்கரை மற்றும் நீர்ச்சத்து இவற்றினை மூளைக்கு வழங்கவும் செய்கின்றது. தலைவலி மற்றும் சோர்வை போக்குகின்றது. நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றது.

கோடையில் பாதாம் சாப்பிடுவது உடல் குளிர்ச்சியை அளிக்கின்றது. மேலும் இதிலுள்ள வைட்டமின் ஈ மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை மூளை செல்களின் செயல்பாட்டை துரிதப்படுத்துகின்றது. ஆதலால் இரவு பாதாமை ஊறவைத்து காலையில் தோல் நீக்கி சாப்பிடவும்.


இளநீர் கோடை காலத்திற்கு சிறந்த பானமாக இருக்கின்றது. இவை மூளைக்கு தேவையான ஆற்றலை அளித்து உடலை இயற்கையாக குளிர்விக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |