இந்தியருக்கு துபாய் லாட்டரியில் விழுந்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் கோடிஸ்வரராக மாறிய அதிசயம்
மும்பையை சேர்ந்தவர் கணேஷ் ஷின்டே, இவர் கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர் பிரேசிலில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்க உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செய்வது வழக்கம் இப்படியாக இவர் அடிக்கடி அவர் துபாய் விமான நிலையம் அடிக்க வந்துள்ளார்.
அப்பொழுது அவர் அங்கிருக்கும் லாட்டரி சீட்டு முறை பற்றி கேள்விபட்டுள்ளார். அப்பொழுது முதல் அடிக்கடி அவர் லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி வந்துள்ளார்.
தூபாயில் டூட்டி ப்ரீ லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் விற்பனையாகின்றன. 1999ம் ஆண்டு முதல் துவங்கிய இந்த லாட்டரி சீட்டுகள் மாதம் இருமுறை குலுக்கல் நடந்து முன்று நபருக்கு பரிசுகளை
வழங்கி வருகிறது. முதல் பரிசு 10 லட்சம் அமெரிக்க டாலர், இரண்டாவது பரிசு சொகுசு கார், மூன்றாவது பரிசு சூப்பர் பைக் என இதுவரை 363 முறை பரிசுகளை வழங்கியுள்ளது.
இதில் அதிர்ஷ்டம் என்னவென்றால் 181 முறை இது இந்தியர்களுக்கே விழுந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு லாட்டரி சீட்டு விழுந்தது. இந்த முறை ஆன்லைனில் லாட்டரி சீட்டு வாங்கி கணேஷ் சிண்டே விற்கு லாட்டரி சீட்டில் 10 லட்சம் அமெரிக்க டாலர் லாட்டரி விழுந்துள்ளது.
இதன் மதிப்பு சுமார் ரூ7 கோடியாகும் இதை வைத்து அவர் தனக்கு வீடு, கார் மற்றும் தன் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக இதை பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.