எட்டு வருட திருமண வாழ்க்கை ... குறையாத காதலுடன் ஆல்யா- சஞ்சீவ் வெளியிட்ட காணொளி!
சீரியல் நடிகை ஆல்யா மானசா இரண்டு குழந்தைகளுக்கு தயான பின்னரும் தன் காதல் கணவருடன் இணைந்து விஜய் பட பாடலுக்கு செம ரொமான்டிக்கான ரியாக்ஷன் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையிலும் வெற்றிநடை போட்டு வருபவர் தான் நடிகை ஆல்யா மானசா.

பிரபல தொலைக்காட்டியில் ஒளிபரப்பானராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

திருமணத்தின் பின்னரும் தொடர்ந்து நடித்துவரும் இவர், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

இந்நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் குறையாத காதலுடன் ஆல்யா- சஞ்சீவ் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |