Doodh Pilai Ritual: மணமகனுக்கு தாய்ப்பால் கொடுத்த அம்மா!
ராஜஸ்தானில் நடந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் திருமணத்தின் போது Doodh Pilai Ritual என்ற பழமையான சடங்கு விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
மணமகனின் திருமண ஊர்வலத்திற்கு முன்பாக செய்யப்படும் குறித்த சடங்கு, குழந்தை பருவத்திலிருந்து திருமண வாழ்க்கைக்கு மாறும் ஒரு மாற்றத்தை குறிக்கிறது.
விவாதிக்கப்படுவது ஏன்?
ஐபிஎஸ் அதிகாரிகளான Krishna Kumar Bishnoi என்பவருக்கும், Anshika Verma என்பவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது Doodh Pilai Ritual சடங்கு பின்பற்றப்பட்டது, இக்காட்சிகள் வெளியாக சமூகவலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Doodh Pilai
ராஜஸ்தானில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய சடங்காகும், இதன் போது மணமகனின் தாய் தாய்ப்பாலூட்டி மகனை அனுப்பி வைப்பார், புதிய பருவத்தில் மகன் அடியெடுத்து வைப்பதை குறிக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
இது மணமகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான மற்றும் கலாசார மாற்றத்தை குறிக்கும் நிகழ்வாகும்.

வேறு எங்கு கடைபிடிக்கப்படுகிறது?
இது பெரும்பாலும் ராஜஸ்தானும் தொடர்புடையதாக இருந்தாலும் ஹரியானா, பீகார் மற்றும் மேற்கு நேபாளில் பின்பற்றப்படுகிறது.
இந்நிகழ்வு சமூகவலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பினாலும் நீண்டகால பண்பாட்டு மரபுகளில் வேரூன்றியவை மற்றும் அக்குழுவின் பாரம்பரியத்தோடு தொடர்புடையவை.
