படகில் கட்டிப்போட்டு நாய்க்கு நடந்த அவலம்: வலியால் துடிதுடித்து இறந்த கொடுமை
கேரளாவில் நாய் ஒன்றினை இளைஞர் கட்டி வைத்து அடித்துக்கொல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே சிலர் கருப்பு நிற நாய் ஒன்றினை படகு ஒன்றில் முன்னங்கால்களை கட்டிப்போட்டு, தொங்கவிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி குறித்த நாயை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போர் மனதை பதபதைக்க செய்துள்ளது.
இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்ட நாய் அதிக காயம்பட்டு உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இறந்த நாய் ப்ரூனோவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இணையத்தில் பலர் #JusticeForBruno என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Heartbreaking Video of a Pet Dog #Bruno beaten to Death in Trivandrum, #Kerala
— Arun Prasanna G (@arun_8778) June 30, 2021
Complaint lodged @ #Vizhinjam Police Station but no #FIR or #Arrest as yet#JusticeForBruno @CMOKerala @TheKeralaPolice @vijayanpinarayi @rashtrapatibhvn @KeralaGovernor pic.twitter.com/cFbRbLXcG3