நரைமுடிக்குச் சாயம் பூசுவது கல்லீரலைப் பாதிக்குமா?
அழகுசாதன முடிச்சாயங்களை வழக்கமாகப் பயன்படுத்துவது, பொதுமக்களிடையே கடுமையான கல்லீரல் நோயை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான மருத்துவச் சான்றுகள் எதுவும் இல்லை. நாங்கள் விளக்குகிறோம்.

நரைமுடிக்குச் சாயம்
தற்போது வயது வித்தியாசமின்றி அனைத்து நபர்களுக்கும் நரைமுடி வரத்தான் செய்கிறது. இதற்கு தற்போது பல காரணங்கள் இருக்கின்றன.
சிலர் இந்த நரைமுடிக்காக அதிக விலை கொடுத்து இரசாயனம் கலந்த முடிசாயங்களை வாங்கி பூசுகின்றனர். இதனால் ஆபத்து வருமா இல்லையா என்பதை பலரும் யோசித்தது கூட இல்லை.
இந்த நிலையில் நரைமுடிக்கு இரசாயன முடிசாயம் பயன்படுத்துவது கல்லீரலை பாதிக்குமா இல்லையா என்பதை மருத்துவ நிபுணர் விளக்கி உள்ளார்.

கல்லீரலை பாதிக்குமா?
கல்லீரல் என்பது மனித உடலின் மிகப்பெரிய மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இது வயிற்றின் வலது மேல் பகுதியில் அமைந்துள்ளது.
இது 500-க்கும் மேற்பட்ட முக்கியமான பணிகளைச் செய்கிறது, குறிப்பாக செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்றவற்றின் முக்கிய பணி இதனுரியது தான்.
அந்த வகையில் நமது சில தவறான பழக்கவழக்கங்கள் மூலமாக நமது கல்லீரல் பாதிக்கப்படுகின்றது. இதை பூப்போல பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
கல்லீரல் பாதுகாப்பிற்காக பல விடயங்களை அறிந்திருப்போம். ஆனால் நாமது நரைமுடிக்கு இரசாயனம் கலந்த சாயம் பயன்படுத்துவதால் நமது உடலில் இருக்கும் கல்லீரல் பாதிக்கப்படுமா என்பதை பார்க்கலாம்.

மருத்துவ விளக்கம்
இரசாயனங்கள் கலந்த முடிச்சாயங்கள் அதன் கடுமையான வாசனையும் பல்வேறு வதந்திகளும் காரணமாக கல்லீரலை சேதப்படுத்தும் என்று பலரை நம்ப வைக்கின்றன.
ஆனால் இது முற்றிலும் தவறானது. சைஃபி மருத்துவமனையின் கல்லீரல் நிபுணரும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான டாக்டர் சேதன் கலால், அழகுசாதன முடிச்சாயங்களை வழக்கமாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களிடையே கடுமையான கல்லீரல் நோய் ஏற்படும் என்பதற்கு உறுதியான மருத்துவச் சான்றுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.
காரணம் வணிக ரீதியாகக் கிடைக்கும் பெரும்பாலான சாயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவை, மேலும் உச்சந்தலையின் வழியாக அவை உறிஞ்சப்படுவது மிகக் குறைவு.

இந்த முடிசாயங்கள் கல்லீரலை பாதிக்கும் அளவிற்கு வலுவான இரசாயனங்களை கொண்டிக்காது என மருத்துவர் கூறி உள்ளார். மேலும் இந்த ஹெர் டைகளில் பிபிடி (PPD) மற்றும் அம்மோனியா போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது.
இது உச்சந்தலையில் ஏற்படும் காயம் வழியாகவோ அல்லது பயன்படுத்தும்போது அதன் ஆவியை உள்ளிழுப்பதாலோ, அதிக அளவில் உடலுக்குள் சென்றால் தீங்கு விளைவிக்கக்கூடும்.
இது பொதுவாக தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிறது. இது ஆபத்தானவை இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |