மணி பர்ஸில் நிறைய வேண்டுமா? அப்போ கண்டிப்பா இத செய்ங்க !
பொதுவாக ஆண், பெண் என இருபாலாரும் மணி பர்ஸ் பயன்படுத்துவார்கள். இதில் சில பொருட்கள் வைப்பதனால் பணம் தாங்காமல் செல்லக்கூடிய நிலை ஏற்படும்.
எப்போது பணம் வைத்தாலும் அது செலவழிவதே தெரியாமல் செலவழிந்து விடும். இது போன்று பிரச்சினைகளுக்கு ஒரு சூட்சமமான முறை உள்ளது.
அதனை தெரிந்துக் கொள்வதனால் கையில் வருமானம் அதிகரிக்கும். அந்த வகையில் இது தொடர்பில் மேலதிகமாக தெரிந்துக் கொள்ள இந்த செய்தியை தொடர்ந்து வாசிக்கவும்.
மறந்துக்கூட இத செய்யாதீங்க
மணி பர்ஸில் மறந்துக்கூட வெட்டக்கூடிய எந்த ஒரு பொருளையும் வைக்கக்கூடாது ஏனெனில் இந்த மாதிரியான பொருட்கள் பண வரவை குறைக்கும். உதாரணமாக கத்தரிக்கோல்,சிறிய கத்தி போன்ற பொருட்கள்.
பொதுவாக எல்லா இடத்திலும் எதிர்மறை வைப்ரேஷன் இருக்கும். அந்த மாதிரியான சக்திகளை மணி பர்ஸிடம் நெருங்க விடாமல் இருப்பதற்கு பச்சை கற்பூரத்தை பயன்படுத்த வேண்டும். இதனை சிறிய பச்சைத் துண்டு துாணியில் சுற்றி மணி பர்ஸினுள் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிர்மறை சக்திகள் கட்டுபடுத்தப்படும்.
மேலும் பெருமாள் கோவிலில் இருந்து வாங்கி வந்த துளசியை வைக்கலாம், இவ்வாறு செய்வதால் பணம் பெறுகும்.
பொதுவாக அநேகமானவர்கள் பர்ஸில் நிறைய ரசிதுகள், பற்றுச்சீட்டுகள் வைத்துக் கொள்வார்கள். இது போன்ற பொருட்கள் பர்ஸில் பணம் தங்குவதை இல்லாமல் செய்யும் மற்றும் பர்ஸில் எந்த நேரமும் பணம் வைத்துக் கொள்வது சிறந்தது, வெறுமையாக வைத்திருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏலக்காய் 2, வேம்பு 1 துாண்டு போன்ற பொருட்களை பர்ஸில் வைத்துக் கொள்வதனால் பண வரவு அதிகரிக்கும்.
முன்னோர்களின் படங்கள் மற்றும் கடவுள் படங்களை பர்ஸில் வைப்பது தவறு. முன்னோர்களையும், கடவுள்களையும் மதிக்க வேண்டும். ஆனால் அவர்களின் புகைப்படங்களை இப்படி பர்ஸில் வைத்திருப்பது தவறு. இதுவும் பண வரவை தடுக்கும்.