உங்களது PF கணக்கில் இதை செய்துவிட்டீர்களா? அப்போ பணம் கிடைக்காதாம்
பிஎஃப் சந்தாதார்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்கவேண்டும்.
இதற்கு முன்னர் பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 1ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
பான் கார்டு வைத்திருப்பவர்களும் தங்களது ஆதார் கார்டை இணைப்பதற்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்துவிடும் என்பதோடு 1,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல, பிஎஃப் ரிட்டன் தாக்கல் செய்வதற்கும் செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பிஎஃப் ரிட்டன் தாக்கல் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட சந்தாதார்கள் தங்களது ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கு பிரச்சினைக்குப் பிறகு பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் பணத்தை அதிகமாக எடுத்து வருகின்றனர். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பிஎஃப் பணத்தை இப்போதே எடுத்தால் அதன் பயன்கள் குறைவாகவே கிடைக்கும் எனவும், நிதி நெருக்கடியைச் சமாளிக்க மாற்று வழிகளைப் பார்க்கும்படியும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பிஎஃப் சேமிப்பு நீண்ட கால அடிப்படையில் அதிக ரிட்டன் தருகிறது.