திமுக எம்.பி. ஆ. ராசாவின் மனைவி மறைவு! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்களின் மனைவி கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
மேலும், இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பரமேஸ்வரி அம்மையாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆ.ராசா இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப திமுக தோள் கொடுத்துத் துணை நிற்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.