இயக்குனர் வேலு பிரபாகரன் மறைவு: சோகத்தில் திரையுலகம்
திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
மறைவு
இயக்குனர் வேலு பிரபாகரன் கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்தார்.
சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை துவங்கிய வேலு பிரபாகரன் இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களில் பிரபலமாக இருந்தார்.
கடந்த 1989ஆம் ஆண்டு நாளைய மனிதன் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி 'அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் என பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் இறப்பு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |