Ethirneechal: பொங்கி எழுந்த ரேணுகா... குணசேகரனிடம் போட்ட சண்டை
எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா தனது கணவரை சிறைக்கு அனுப்பியதால் கோபத்தில் கொந்தளித்து குணசேகரனிடம் சண்டையிட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியின் தந்தையை கொலை செய்த வழக்கில் ஞானத்தை சிறைக்கு அனுப்பி வைத்த குணசேகரன், தற்போது எதிர்பாராத விதமாக பார்கவி அவரது வீட்டிற்கே வந்துள்ளார்.
இதனால் குணசேகரன் என்ன செய்வது என்பது தெரியாமல் யோசித்து வருகின்றார். இத்தருணத்தில் ரேணுகா குணசேகரனிடம் வந்து சண்டையிட்டுள்ளார்.
அதாவது பார்கவி தந்தை கொலை வழக்கில் ஞானம் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார். இதனால் ரேணுகா பொங்கி எழுந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |