உறைந்து போன சினேகா! கதறிய தாய்... தந்தைக்கு நடந்த அவலம் - அரங்கத்தை அதிர விட்ட இளைஞர்
டான் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன் தந்தைக்கு நடந்ததை நடனமாக ஆடி அனைவரையும் கண்ணீர் விட்டு இளைஞர் ஒருவர் அழ வைத்துள்ளார்.
நடனமாடி முடிந்த பிறகு மேடைக்கு வந்து இளைஞரின் தந்தை பேசினார்.
திருமணமாகி 4 வருடத்தில் குழந்தைகள் சிறுவர்களாக இருக்கும் போது எனக்கு நடந்த உண்மை சம்பவம் தான் மகனின் இந்த மேடை நடனம்.
கடலில் மீன் பிடிக்கும் போது எங்களை போலீஸார் கைது செய்து விட்டனர்.
குழந்தைகள் சிறுவர்களாக இருக்கின்றார்களே எப்படி மனைவிக்கு தகவல் சொல்வது என்று தவித்தேன்.
பிறகு 2 மாதங்களுக்கு பின்னர் எங்களை விடுவித்தார்கள். மீனவர் ஒவ்வொருவரும் தொழிலுக்கு சென்று திரும்பும் வரை எதையும் கூற முடியாது என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
மிரள வைத்த நடுவர்கள்
நடுவர்கள் அனைவரும் நடனமாடிய ஜோடிக்கு கோல்டன் பர்பாமன்ஸ் என்று பெருமைபடுத்தினார்கள்.
அதை கேட்டு தானே விருது வாங்கிய மகிழ்ச்சியை இளைஞரின் தந்தை வெளிப்படுத்தியது அனைவரையும் சிலிர்க்க வைத்திருந்தது.