சர்க்கரை நோயாளிகள் சீதாப்பழம் சாப்பிடலாமா? தொடர்ந்து உண்பதால் நடக்கும் அதிசயங்கள்
பொதுவாக பழங்கள் என்றாலே அனைவரும் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழைப்பழம் போன்றவைகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இவையெல்லாம் பழங்கள் எல்லாம் அந்த நேரத்துக்கு மட்டுமே நினைவுக்கு வரும்.
ஆனால் சில பழங்களை மட்டுமே எதிர் நோக்க தொடங்குவோம். அதில் முக்கியமானது மாம்பழமும், சீத்தாப்பழமும். சீஸன் வரும் போதே அதன் சுவையை ருசிக்க தொடங்கிவிடுவோம்.
சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என எல்லாமே மருத்துவகுணங்களை கொண்டது தான். சீத்தாப்பழம் குளுக்கோஸ், சுக்ரோஸ் இரண்டுமே நிறைந்திருப்பதால் உடனடியாக உடலுக்கு ஆற்றல் தருகிறது.
ரத்த அழுத்தம்
சீத்தாப்பழத்தில், அதிகளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இவை இரண்டுமே உதவுகிறது.
இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்கிறது.
செரிமான பிரச்சினைக்கு
ஒரு கப் அளவுள்ள சீத்தாப்பழ விழுதில் 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. சீத்தாப்பழத்தில் நார்ச்சத்தும் தாமிரச்சத்தும் சீராக இருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது.
இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது. சீத்தாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைச்சுற்றல் போன்றவற்றை குணப்படுத்தும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
மன அழுத்தத்தை கட்டுப்படுத்த சீத்தாப்பழம் மிகவும் உதவுகிறது. மனநிலையை சீராக்க உதவும் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்றவற்றுக்கு வைட்டமின் பி6 முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் பி6 குறைபாடு ஒருவரின் மனச்சோர்வை இரட்டிப்பாக்குகிறது என்று கண்டறியப்பட்டது. இந்த வைட்டமின் அதிகரிப்பதன் மூலம் மனச்சோர்வு அபாயம் குறைக்கப்படும். அதற்கு சீத்தாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி 6 உதவக்கூடும்.
உடல் எடையை அதிகரிக்க
உடல் எடையை அதிகரிக்கவும் குறைக்கவும், அதிக கொழுப்புகள் சேர்ந்துவிட வாய்ப்புண்டு. அப்படி ஆகாமல் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமெனில் சீத்தாப்பழத்தை தேர்வு செய்யலாம்.
இதில், அதிக ஊட்டச்சத்துக்கள், சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களால் நிரம்பியுள்ளது.
சீத்தாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக செய்யும்.
ஆஸ்துமாவுக்கு
சீத்தாப்பழம் வைட்டமின் பி 6 யை கொண்டுள்ளது. இது மூச்சுக்குழாய் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. ஆஸ்துமாவை தடுக்க உதவுகிறது.
நுரையீரல் தொடர்பான சிக்கல் இருப்பவர்களுக்கு சீத்தாப்பழம் நன்மை தரும். வைட்டமின் சி உள்ளதால் சளி பிடிக்குமோ என்று பயப்படவேண்டாம்.
இவை, சீத்தாப்பழத்தை குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த கூடியது. ஆஸ்துமா, காசநோயை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
wavebreakmedia/Shutterstock
எலும்பு பலமடைய
சீத்தாப்பழம் ஆனது உடலுக்கு வலிமை கொடுக்க கூடியது. இதயத்துக்கு பலம் கொடுக்கும் . கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்பு, பற்கள் பலமடையும்.
தசைப்பிடிப்பு இருப்பவர்கள் சீத்தாப்பழம் எடுத்துகொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும்.
பெண்களுக்கு ஏற்ற கனி இது என்றும் சொல்லலாம். இவை கருவுறுதலை மேம்படுத்தும், சோர்வு உணர்வை குறைக்கும். எரிச்சலை குறைக்கும் தன்மைகொண்டது.
நீரிழிவுக்கு நல்லதா?
நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்துவருகிறது. சீத்தாப்பழம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் நிறைந்திருக்கும் என்பதால் இதை சாப்பிட்ட உடனேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்கிறார்கள்.
நீரிழிவு இருப்பவர்களுக்கு லோகிளைசெமிக் உணவில் 55 மற்றும் அதற்கு குறைவான அளவு உணவுகளே பரிந்துரைப்பதால் சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாம் என்கிறார்கள்.
மேலும் இது நார்ச்சத்தும் உள்ள பழம் என்பதால் இது ரத்த சர்க்கரை அளவு உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது என்றும் சொல்கிறார்கள்.
முக்கியமாக சீத்தாப்பழத்தின் மீது அதிக பிரியம் கொண்டிருந்தால் ஒருமுறை உங்களின் மருத்துரின் ஆலோசனையை பெறவும் மறக்க வேண்டாம்.
கண்களை பாதுகாக்க
சீத்தாப்பழத்தில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இவை இரண்டுமே உங்கள் கண்களுக்கு நல்லதாகும்.
ப்ரீ ராடிக்கல்களை அழிக்க இது உதவுவதால், நல்ல கண் பார்வையை பராமரிக்க இது உதவிடும்.
குமட்டலை தடுக்கும்
கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். அதே போல் பிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்கவும் இது உதவும்.
முக்கியமாக, காலையில் ஏற்படும் குமட்டலை இது நீக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், உணர்வின்மை, பசி, மனநிலையில் ஏற்ற இறக்கம் போன்றவைகளுக்கு எதிராக போராடும்.
சரும பிரச்சினைகளுக்கு
சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும். சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளி பிடிக்காது.
சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யமாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும். சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.
praveen pandian
எப்போது சாப்பிட வேண்டும்
* உணவுக்குப் பிறகு ஒருபோதும் பழங்களை சாப்பிட வேண்டாம்
* உணவுடன் பழங்களை சாப்பிட வேண்டாம்
* காலை 11 அல்லது மாலை 4 மணிக்கு ஒரு சிற்றுண்டி போல பழத்தை சாப்பிடுங்கள்
* பழங்களை மற்ற உணவோடு இணைக்க தேவையில்லை. ஒரு நேரத்தில் ஒன்று சாப்பிடுங்கள்
* பழச்சாறு வடிவில் பழங்களைத் தவிர்க்கவும். சிறந்த நன்மைகளைப் பெற அவற்றை முழுமையாகச் சாப்பிடுங்கள்.