ஒரே ஒரு சத்தம்! ஒன்றுகூடிய காக்கைகள்- ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வைரல் வீடியோ
திறந்த நீல வானில் ஒரு இளைஞனின் அழைப்பைக் கேட்டு பல காகங்கள் ஒன்றுக் கூடிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
காகம் போல் கரைந்த இளைஞன்
மனிதர்களும் விலங்குகளும் காலங்காலமாக இணைந்து வாழ்கின்றன. விலங்குகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஈர்க்க அல்லது கவர்ந்திழுக்க மனிதர்கள் சில முறைகளைப் பயன்படுத்துவார்கள்.
அதாவது உணவைப் பயன்படுத்துவது அல்லது விலங்குகள், பறவைகள் போல குரலெழுப்பி அழைப்பது போன்றவையாகும். இவ்வாறு குரலெழுப்பி பறவைகள், விலங்குகளை வேட்டையாடுவது ஒரு வழக்கம்.
அதுமட்டுமல்லாமல் நாம் விரதம் இருக்கும் போது படையல் உணவுகளை வழங்குவதற்காக இந்த காகங்களை அழைப்பதை நாம் நிறையவே பார்த்திருப்போம். காகம் கரைவது போல் அல்லாமல் மிதமான “கா கா” என அழைத்து உணவு வழங்கியிருப்போம்.
வைரல் வீடியோ
ஆனால் இளைஞன் ஒருவன் அவர் பாணியில் காகங்களை அழைக்கிறார், வெறும் நீலமாக காட்சியளித்த வானம் சில நொடிகளில் காகங்களால் நிரம்பி விட்டது.
அந்த இளைஞன் அழைப்புக்குப் பிறகு காகங்களால் நிரம்பிய தெளிவான நீல வானம் சம்பவ இடத்தில் இருந்த மக்களுக்கு இது கண்கவர் காட்சியாக இருந்தது.
இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "இந்தியாவின் காக்கை நாயகன்" என்று தலைப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
மேலும், காகங்கள் பொதுவாக மிகவும் நட்பாகவும் கருதப்படுவதில்லை செல்லப்பிராணியாகவும் கருதப்படுவதில்லை. இவ்வாறு இருக்கும் பறவைகளையோ விலங்குகளையோ வரவழைப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகக் விடயம்.