Viral video: தானாக வந்து வம்பிழுக்கும் யானை- கடுப்பான முதலை செய்ததை பாருங்க
முதலை இருக்கும் இடத்திற்கு வந்து வம்பிழுத்த யானைக்கு முதலைக் கொடுத்த பதில் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சமீப நாட்களாக முதலை மற்றும் பாம்புகள் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளன.
அந்த வகையில், நீரும் நிலத்திலும் வாழும் முதலையொன்று தரையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அப்போது அந்த வழியில் வந்த யானையொன்று முதலையின் பக்கத்தில் வருகிறது. வந்து முதலை இருப்பதை பார்த்து விட்டு, கீழே கிடந்த மண்ணை தும்பிக்கையால் வாரி வாரி முதலையின் மேல் போடுகிறது.
உச்சக்கட்ட கடுப்பில் முதலை
முதலையும் பொறுமையாக இருந்து பார்க்கிறது. ஆனால் யானையின் அட்டகாசம் பொறுக்கமுடியவில்லை.
பிறகு, கடுப்பான முதலை அங்கிருந்து நகர்ந்து பார்க்கிறது. அப்போதும் யானை மணலை வாரி போட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த காட்சியை பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது. ஆனாலும், முதலைக்கு எவ்வளவு கடுப்பாக இருக்கும் என்பதனை உணர முடிகிறது.
இந்த காணொளியை இணையவாசிகள் எப்போதும் சேட்டைச் செய்யும் நண்பர்களுக்கு பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
Elephant throwing dirt on a Nile Crocodile for some reason. pic.twitter.com/QmoROxQhf6
— Beauty Of Nature 🌳 (@ShouldHaveAnima) February 23, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |