பாடகி கெனிஷாவுக்கு அபராதம்... பின்னணியில் உள்ள காரணம் என்ன?
நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷாவிற்கு வெளிநாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.
ரவி மோகன் கெனிஷா
பிரபல நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த பாடகி கெனிஷாவிற்கும், ரவி மோகனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
மன உளைச்சலில் இருந்த ரவி மோகனுக்கு கெனிஷா ஆறுதலாக இருந்து வந்துள்ள நிலையில், குடும்பத்தை உடைத்தவர் என்ற கருத்தையும் முன் வைத்த நிலையில், கெனிஷா அதையும் எதிர்கொண்டார்.

கெனிஷா இதற்கான விளக்கத்தையும் அளித்திருந்தார். அதாவது எந்தவொரு தவறான உறவும் இல்லை என்றும் ஆலோசகர் - கிளைண்ட் என்ற முறையில் தான் பழகியதாக கூறியதுடன், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.
தற்போது இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கெனிஷா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதாகவும், ஷார்ஷா நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.
அபராதம் எவ்வளவு?
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஷார்ஜா நகரில் வசித்த இந்திய பெண் ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக கெனிஷா சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிதாக கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் மீதும் அல்புகாரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபிய சட்டப்படி, ஒருவரை அவமானப்படுத்தினால் 2.5 லட்சம் திர்ஹாம் முதல் 5 லட்சம் திர்ஹாம் வரை அபராதம் விதிக்கலாம்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை என்றும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
இருவருக்கும் தலா 5 ஆயிரம் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.30 லட்சம் ரூபாய்) திர்ஹாம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |