முதல்வரை நேரில் சந்தித்து லட்ச கணக்கில் கொரோனா நிதி வழங்கிய பிரபலங்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாய், நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் 25 லட்சம் ரூபாய், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாயும் வழங்கி இருக்கிறார்கள்.
தற்போது இயக்குனர் வெற்றிமாறன் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் வழங்கி இருக்கிறார்.
இதேவேளை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.