கொத்தமல்லியில் டீ! அரை நொடியில் ரெடி - இவ்வளவு பலனா?
கொத்தமல்லி இலைகள் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலின் சமையலறையிலும் தென்படும் ஒரு வாசனை தாவரமாகும்.
பல ஆண்டுகளாக, உணவுகளின் சுவையை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பல்வேறு வழிகளில் கொத்தமல்லி தழைகள் பயன்படுத்தப்படுகிறது.
சிலர் கொத்தமல்லி இலைகளைப் பயன்படுத்தி சட்னி தயாரிப்பார்கள். கொத்தமல்லி இலைகள் நரம்புகளை ஊக்குவிக்கும் ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது. இது மறதியை கட்டுபடுத்தி நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் வாய்ப்புண்களை குணப்படுத்தவும் சுவாச புத்துணர்ச்சியை அதிகரிக்கவும் செய்கின்றன.
உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க கொத்தமல்லி தேநீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளலாம். இதனை தயாரிப்பது என்பது மிகவும் எளிது.
கொத்தமல்லி இலை டீ செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி இலை - 1 கப்
- நட்சத்திர பூ - 1
- மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
- தண்ணீர் - 1 ½ கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைக்க வேண்டும்.
ஒரு நிமிடம் கழித்து, கொதிக்கும் தண்ணீரில் நட்சத்திர பூ மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்பொது பாத்திரத்தை மூடி சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர், அடுப்பை அணைத்து விட்டு, கொதிக்க வாய்த்த தண்ணீரை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றவும். அவ்வளவுதான் கொத்தமல்லி தேநீர் தயார். நீங்கள் விரும்பினால் இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.