தவறு நடந்துருச்சு.. மன்னிச்சிடுங்க? என்ன நடந்தது குக் வித் கோமாளியில்?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
வயிறு குலுங்க சிரிக்க, கவலைகளை மறக்க இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம்.
குக் வித் கோமாளி சீசன் 3
பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய மூன்றாம் சீசனில் போட்டியாளர்களாக ரோஷினி, சுருதிகா, மனோபாலா, வித்யூ லேகா, சந்தோஷ், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இல்லத்தரசிகள் மட்டும் பார்த்து வந்த சமையல் நிகழ்ச்சிகளை, கோமாளிகளின் ஜாலியான நகைச்சுவைக்காகவே அனைவரும் பார்க்கத் தொடங்கினர்.
இதுவரை சூப்பராக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது வெளியான புதிய ப்ரோமோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தவறு நடந்துருச்சு.. மன்னிச்சிடுங்க?
தற்போது வெளியாகிய ப்ரோமோ ஒன்றில் ரக்ஷன் “சாரி, சிறிய தவறு நடந்து விட்டது” என கூறி அங்குள்ள அனைத்து கோமாளி மற்றும் குக்குகளை அதிர்ச்சியாக்குகிறார்.
அதன் பின் செஃப் தாமு வந்து ” I love you so much, All of you” என விடை பெறுவது போல் பேசியுள்ளார்.
அதற்கு போட்டியாளர்கள் அனைவரும் கண் கலங்கி சோகத்தை தெரிவிப்பது போன்று உள்ளது.
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நிகழ்ச்சியை விட்டு தாமு செல்கிறாரா! என்று தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஏப்ரல் 1ம் தேதி அனைவரையும் முட்டாளாக்க பார்க்கிறார்கள் என்றெல்லாம் கமெண்டுகள் பதிவாகி வருகிறது.
என்ன நடக்கும் என்பதை வரக்கூடிய எபிசோட்டில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
மேலும் படிக்க- முதல் முத்தம் கொடுத்தது யார்? லொஸ்லியா போட்டுடைத்த உண்மை