நீரிழிவு நோயாளிகள் எடையை வேகமாக குறைக்க தினமும் கிராம்பு சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிடனும்?
எடை இழப்பை விரைவுபடுத்த கிராம்பு உதவி புரிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
கிராம்பில் யூஜெனால் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது.
ஒரு பிடி கசப்பான பாதாம் உயிருக்கு ஆபத்தாம்! இனி இப்படி மட்டும் சாப்பிட்டுடாதீங்க....!
கிராம்புவை தேநீர் மற்றும் சமையலில் நீங்கள் பயன்படுத்தலாம்.
எடை குறைப்பதில் கிராம்புகளின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
எடையை குறைக்க கிராம்பு எப்படி உதவுகிறது?
கிராம்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
வளர்சிதை மாற்றம் நேரடியாக எடை இழப்புடன் தொடர்புடையது மற்றும் குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதற்கான அறிகுறி என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தேநீரில் பயன்படுத்தப்படும் கிராம்பு மற்றும் மசாலாப் பொருட்களில் உள்ள கலவை உங்கள் செரிமான செயல்முறையை மேம்படுத்தும்.
இது இரண்டு செயல்முறைகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதால் உடல் எடையை குறைக்க உதவும். மசாலாப் பொருட்கள் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.
இது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதனால் உங்கள் உடல் எடை விரைவாக குறையும்.
நீரிழிவு நோயாளிகள் கூட தங்கள் உணவில் கிராம்புகளைச் சேர்த்து உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம்.
கிராம்புகளில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கலவைகள் உள்ளன.
எனவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுப் பொருட்கள் பொதுவாக குறைவாக உள்ளவர்கள் தங்கள் உணவை கிராம்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தினமும் சாப்பிடலாம்
கிராம்பு எளிதில் கிடைக்கும் மசாலாப் பொருள். இதில் மருத்துவ குணங்கள் அதிகளவு நிறைந்துள்ளது. அதனால் தான், பண்டைய காலங்களில் இருந்து கிராம்பு உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆதலால், ஒருவர் தினமும் சில கிராம்புகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது சமையலில் பயன்படுத்தி உண்ணலாம்.
இந்த நிற உடையை அணிந்து இண்டர்வியூக்கு போனால் கண்டிப்பா வேலை கிடைக்குமாம்!
முக்கிய குறிப்பு
அதிகம் எடுத்து கொண்டால் ஆபத்து. 3 அல்லது 2 போதுமானது. யாராக இருந்தாலும் எதையும் முயற்சிக்கும் முன்னர் மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்யவும்.
சிலரது உடலுக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் உள்ளது. எனவே மருத்துவரின் ஆலோசனை இன்றி எதையும் எடுத்து கொள்ள வேண்டாம்.
