தந்தை எஸ்.பி.பியின் சொத்துக்களை அழித்தேனா..? மறைவுக்குப் பின் வெடித்த சர்ச்சை - உண்மையை உடைத்த எஸ்.பி.பி சரண்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் படங்கள் தயாரித்து கடும் நஷ்டத்தை அடைந்ததால் எஸ்.பி.பி. இருக்கும்போதே பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது வைக்கப்பட்டன.
அவர் இல்லாத நிலையில் அவரின் சொத்துக்களை இவர் அழித்து விட்டதாக பல தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றது.
எஸ்.பி.பி சரண் தந்தையின் பணத்தை படம் எடுத்து அழித்ததாக கூறப்பட்டு வந்த தகவலுக்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...
தன்னுடைய பெற்றோரின் அனுமதியுடன் நான் தயாரித்த முதல் படமான 'உன்னை சரணடைந்தேன்' இந்த படம் வசூல் ரீதியாக லாபம் பெறவில்லை என்றாலும் மாநில அரசின் விருதை பெற்றது.
இந்த படத்தை சமுத்திரக்கனி கூறிய கதை பிடித்ததால் மட்டுமே தயாரித்தேன். இதைத் தொடர்ந்து, தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வர்ஷம்' திரைப்படத்தை தமிழில் 'மழை' என்ற பெயரில் பிரமாண்டமாக தயாரித்தேன்.
ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியதால் ஒட்டு மொத்த பணத்தையும் இழந்தேன். மேலும் தந்தை எஸ்.பி.பி அவர்கள் சம்பாதித்த பணத்தை படம் எடுத்து அழித்து விட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது தனக்கு மேல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது.
அப்போது மேடை கச்சேரிகள் தான் பொருளாதார ரீதியாக தங்களுக்கு உதவியதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தந்தையின் இழப்பு வாழ்க்கையில் சீர்குலைத்து விட்டதாக தெரிவித்துள்ள சரண், மீண்டும் தந்தையின் குரலில் பாட உள்ளதாக உணர்ச்சிவசத்தோடு பேசியுள்ளார்.