14 ஆண்டுகளாக விமானநிலையத்திலேயே தங்கியிருக்கும் நபர்! எதற்காக இந்த முடிவு தெரியுமா?
சீனாவில் வீட்டுக்கு போகாமல் 14 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே ஒருவர் வசித்துவருகிறார். இதற்கு அவர் கூறிய காரணம் தான் அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது.
விமான நிலையத்தில் வசிக்கும் நபர்
சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் வீ ஜியாங்குவோ.இவர் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் தங்கியுள்ள ஜியாங்குவோ, எப்போதும் தன்னைச் சுற்றி பயணிகள் இருப்பதால் தனக்கு எந்தவித கவலையும் இல்லை என கூறுகிறார்.
காரணம் என்ன?
வீ ஜியாங்குவோ புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். இதற்கு அவரது வீட்டினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அவர் பேசும்போது," வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லாததால் என்னால் அங்கு செல்ல முடியாது. நான் வீட்டில் தங்க விரும்பினால் புகைப்பதையும் குடிப்பதையும் விட்டுவிட வேண்டும் என்று என் குடும்பத்தினர் சொன்னார்கள்.
மேலும் நான் அதை செய்யாவிட்டால் என்னுடைய மாதாந்திர அரசு உதவித் தொகையான 1000 யுவான்களை (150 அமெரிக்க டாலர்) அவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறுகிறார்கள்.
பணத்தை அவர்களிடம் கொடுத்து விட்டால் மது மற்றும் சிகரெட் செலவிற்கு தான் என்ன செய்வது என்பதை யோசித்த இவர் வெளியே இறங்கியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் இவரை விமான நிலையத்திலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
விமான நிலையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இவரது வீட்டிற்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் சில நாட்களிலேயே இவர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்து தங்க தொடங்கிவிட்டார்.
சிரித்துக்கொண்டிருந்த சிம்பு கண்ணீர் விட்ட சோகம்! அதிருப்தியில் போட்டியாளர்கள்
உணவிற்கு என்ன செய்கிறார்?
தற்போது அதிகாரிகள் இவரைத் தொந்தரவு எதுவும் செய்யாமல் இருப்பதால், சுதந்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்திலேயே தூங்கிக் கொள்ளும் இவர் காலையில் சந்தைக்குச் சென்று வேகவைத்த பன்றி இறைச்சி ரொட்டிகள், சில உணவுப் பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்கிறார்.
அரசு தரும் மாதாந்திர உதவித் தொகையை வைத்து தன்னுடைய செலவுகளை சரி கட்டி வருகிறார் இந்த விசித்திர மனிதர்.