ஓடுதளத்தில் இருந்து திடீரென தீப்பற்றிய விமானம் - 113 பயணிகளின் நிலை என்ன?
ஓடு தளத்தில் இருந்து திடீரென தீப்பிடித்தப்படியே எரிந்த விமானத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவின், சாங்கிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாசாவிற்கு செல்வதற்காக திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்றும் 113 பயணிகள் மற்றும் 9 விமான பணியாளர்களுடன் பறப்பதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது.
இதையடுத்து, எதிர்பாராத விதமான ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த விமானம் தீ பற்றி எரிந்துள்ளது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த 113 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுக்கும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேலும், ஒருசிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
According to reports, at about 8:00 on May 12, a Tibet Airlines flight deviates from the runway and caught fire when it took off at Chongqing Jiangbei International Airport.#chongqing #airplane crash #fire pic.twitter.com/re3OeavOTA
— BST2022 (@baoshitie1) May 12, 2022