அடிக்கடி UPI -ல் பேலன்ஸ் செக் பண்றீங்களா?.. வெளியானது புதிய விதிகள்
யுபிஐ பரிவர்த்தனைகளில் இருப்பு சரிபார்ப்புக்கு நாள் ஒன்றிற்கு 50 முறை மட்டுமே என்ற புதிய வரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
யுபிஐ
யுபிஐ (UPI) அடிப்படையிலான பணப்பரிமாற்றங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. PhonePe, Google Pay போன்ற செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன.
தேசிய பணப்பரிமாற்றக் கழகம் (NPCI) எடுத்த முக்கிய முடிவுகளால் இருப்பு சரிபார்ப்பு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றது.
அதாவது ஆகஸ்ட் 1, 2025 முதல் நாள் ஒன்றிற்கு 50 முறை மட்டும் இருப்பு சரிபார்க்கும் முறையை அமலுக்கு கொண்டு வருகின்றது.
அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட UPI செயலிகளைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால் (PhonePe + Google Pay), ஒவ்வொரு செயலியிலும் 50 முறை என மொத்தம் 100 முறை இருப்பு சரிபார்க்கலாம்.
வங்கிகள் கணக்கு இருப்பு
மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பிறகும் வங்கிகள் கணக்கு இருப்பை பயனருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று NPCI தெளிவாகக் கூறியுள்ளது.
UPI-யின் பின்னணியில் நடைபெறும் API பரிவர்த்தனைகள் (தானியங்கி சேவைகள், வங்கிச் செயலிகள் போன்றவை) மீதும் புதிய வரம்புகள் அமலுக்கு வரவுள்ளன.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை API பரிவர்த்தனைகள் செய்ய பயனர்களின் அனுமதி தேவைப்படும்.

Sandhya Raagam: கைவிட்டுச் செல்லும் ரகுராமின் பூர்வீக வீடு... மாஸ் எண்ட்ரி கொடுத்து காப்பாற்றிய மாயா
டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள்
இந்த மாற்றங்கள் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களின் பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அமைப்பை நிலையாக வைத்திருக்கவும் உதவும்.
பயனர்கள் தங்கள் செயலிகள், வங்கி எச்சரிக்கைகள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும். முக்கியமாக, தேவையில்லாமல் இருப்பு சரிபார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |