திருமண மண்டபத்தில் நண்பர்களுக்கு வைத்த பார்ட்டி: இறுதியில் அலறி துடித்த மணமகள்! நடந்தது என்ன?
திருமணத்தில் நடைபெற்ற பார்ட்டியில் நண்பரைக் கொலை செய்த மற்றொரு நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 28 வயதான இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார். மேலும் நண்பர்களுக்கு முதல் நாள் இரவு மண்டபத்தின் மாடியில் மதுவிருந்து கொடுத்துள்ளார்.
இவ்விருந்தில் டெல்லியில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் டிங்கு என்பவரும், அவரது குழந்தை பருவ நண்பர், தீபக் பண்டிட் என்பவரும் கலந்து கொண்டனர் .
அப்போது அவர்கள் இருவரும் மற்ற நண்பர்களோடு சேர்ந்து மதுவருந்திய நிலையில், திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த தீபக் அங்கிருந்த மது பாட்டிலை உடைத்து அவரின் நண்பர் டிங்குவை அடித்து கொலை செய்து விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதனை அவதானித்த மணமகள் அலறிதுடித்ததோடு, அவரது சகோதரருக்கு போன் செய்து தம்பி டிங்கு இறந்ததுகிடப்பதாகக் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த அண்ணன் தனது தம்பியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் டிங்குவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
டிங்குவை கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆன அவரின் நண்பர் தீபக்கை கைது செய்ய பொலிசார் தேடி வருகின்றனர்