நாவூரும் சுவையில் முட்டைகோஸ் மஞ்சூரியன்... இப்படி செய்து அசத்துங்க!
பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவதென்றால், அனைவருக்கும் பிடிக்கும். சமையல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.
அந்தவகையில் மஞ்சூரியன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு Chinese உணவாகும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பி்டுகின்றனர்.
குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த உணவு மிகவும் பிரபல்யமாக இருந்து வருகின்றது. மஞ்சூரியன்களில் பல வகை உண்டு.
அதில் முக்கியமாக சிக்கன் மஞ்சூரியன், ஃபிஷ் மஞ்சுரியன், பன்னீர் மஞ்சூரியன், வெஜிடபிள் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், மற்றும் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் குறிப்பிடத்தக்கவை.சற்று வித்தியாசமான சுவையில் முட்டைகோஸ் மஞ்சூரியன் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் - 500 கிராம்
மைதா - 1/2 கப்
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1தே.கரண்டி
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தண்ணீர் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
வதக்குவதற்கு தேவையானவை
சோள மாவு - 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 2 தே.கரண்டி
பூண்டு - 1 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 1தே.கரண்டி
வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 தே.கரண்டி
சிறிய குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி சாஸ் - 2 தே.கரண்டி
சோயா சாஸ் - 1 தே.கரண்டி
வினிகர் - 1 தே.கரண்டி
க்ரீன் சில்லி சாஸ் - 1 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து அதில், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், மைதா, சோள மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சிறிது உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கைகளால் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துக் தனியாக ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதழனயடுத்து ஒரு கிண்ணத்தில் 1/2 டேபிள் ஸ்பூன் மைதா மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில், நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதக்கி, அதில் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்கக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர், க்ரீன் சில்லி சாஸ் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதில் சோள மாவு நீரை ஊற்றி 1 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும். கெட்டியாகத் தொடங்கியதும், அதில் ப்ரை செய்து வைத்துள்ள முட்டைக்கோஸ் உருண்டைகளை சேர்த்து, 2 நிமிடங்கள் நன்றாக கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான முட்டைகோஸ் மஞ்சூரியன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |