ஜாலியாக நடனமாடிய மணமக்கள்: பெண்ணின் கன்னத்தில் பளார் என அறைந்த மணமகன்! பின்பு நடந்த சோகம்
திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அறைந்ததால் திருமணம் நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த எம்.எஸ்.சி பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ள நிலையில், திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இரு வீட்டு உறவினர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்வில், பாட்டு கச்சேரியும் நடைபெற்றுள்ளது. இதில் திருமணமாக இருந்த ஜோடிகள் நடனமாடியுள்ள நிலையில், இடையே மணமகளின் சகோதரர் உறவுமுறை வாலிபர் ஒருவர் வந்து நடனமாடியுள்ளார்.
இதனை பிடிக்காததால் மாப்பிள்ளை திடீரென கோபத்தில் மணமகளின் கோபத்தில் பளார் என அறைந்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு இவ்வாறு தாக்கும் நபரை மணமகள் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
மாப்பிள்ளை மணமகள் உறவினரிடம் மன்னிப்பு கேட்டும் யாரும் சமாதானம் ஆகாத நிலையில், மணப்பெண்ணின் வீட்டினர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்பு இரவு குடும்பமாக பேசி உறவுக்கார இளைஞருடன் குறித்த பெண்ணிற்கு மறுநாள் காலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.