மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு! மேடையில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை: நடந்தது என்ன?
திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென மணமகள் மேடையை விட்டு எழுந்ததால், மணமகன் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தில் நடந்த அதிர்ச்சி
ஒடிஷா மாநிலத்தில் ரெமு என்னும் கிராமத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணமக்கள் திருமணத்திற்கு தயாராக இருக்க, சுற்றி எங்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ்ந்திருந்தனர்.
அப்பொழுது மணமகள் திடீரென மேடையை விட்டு எழுந்து தனது கையில் உள்ள வளையல்களை கழற்றியுள்ளார். இதனைக் கண்ட அனைவரும் பதற்றத்துடன் மணப்பெண்ணின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த திருமணம் மணப்பெண்ணிற்கு பிடிக்கவில்லை என்றும், பெண் தனக்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அசால்டாக 100 கிலோ எடையை தூக்கிய சமந்தா! பின்பு கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
மயங்கி விழுந்த மணமகன்
பெண் செய்த காரியத்தைக் கண்ட மணமகன் மணமேடையில் மயங்கி விழுந்துள்ளார். பின்பு உறவினர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து பின்பு மயக்கம் தெளியவைத்துள்ளனர்.
சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து மணமகன் கண் விழித்ததும், உறவினர்கள் பெருமூச்சு விடடுள்ளனர்.
மாடர்ன் உடையில் ஸ்டைலான நடனம்! ஐக்கி பெர்ரிக்கு தாமரை அளித்த பரிசு