IQ Test: பசியால் கத்தி அழும் குழந்தை.. சமாதானம் செய்ய வந்தவர்களில் யார் குழந்தையின் தாய்?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
குழந்தையின் தாய் யார்?
அந்த வகையில், படத்தில் ஒரு குழந்தை பசியால் சாப்பாடு கேட்டு கத்தி அழுதுக் கொண்டிருக்கிறது. அப்போது வீட்டிலுள்ள மூன்று பெண்களும் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்தி விட்டு குழந்தையை சமாதானம் செய்ய வருகிறார்கள்.
இவர்களில் ஒருவர் தான் குழந்தையின் உண்மையான தாய். நாம் 5 வினாடிகளில் குழந்தையின் உண்மையான தாயை கண்டுபிடித்து விட்டால் குழந்தை சாப்பாடு கொடுத்து, சமாதானம் செய்து விடலாம்.
கொடுக்கப்பட்ட நேரத்தில் குழந்தையின் தாயை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து குழந்தையின் உண்மையான தாய் யார்? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- மூன்று பெண்களில் இரண்டு பெண்கள் குழந்தையை எப்படி சமாதானம் செய்யலாம் என யோசிக்கையில், நடுவில் உள்ள பெண் மாத்திரமே குழந்தையின் அழுகையால் மன அழுத்தம் கொள்கிறார். ஏனெினன் வழக்கமான தாய்மார்களுக்கு தன்னுடைய குழந்தை அழுதால் பிடிக்காது. அந்த சத்தத்தை கேட்கவும் விரும்பமாட்டார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |