இளநரையினால் அதிகமாக கஷ்டப்படுகிறீர்களா? இந்த ஒரு பொருள் செய்யும் அற்புதம்
இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலானோர் இளம் வயதில் தலைமுடி நரைக்க தொடங்கியுள்ளதால் பெரும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கு பெரும் காரணம் என்னவெனில், உணவு முறையில் பெரும் மாற்றம், அதிக வேலைப்பளுவினால் ஏற்படும் அழுத்தம், அதிகரித்து வரும் மாசுமாடு காரணமாக இருக்கின்றது.
இவ்வாறு இளநரையில் கஷ்டப்படுபவர்களுக்கு பிளாக் டீ பெரும் தீர்வினைக் கொடுக்கின்றது.
பிளாக் டீயை எப்படி பயன்படுத்துவது?
டானிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள பிளாக் டீ யில் இயற்கையாகவே முடி கருமையாகும்.
சுமார் 2 கப் தண்ணீருடன் 5 அல்லது 6 தேக்கரண்டி தேயிலையினை போட்டு நன்கு கொதிக்க வைத்து, ஆறவைக்கவும்.
பின்பு முடியில் நன்கு தடவி சுமார் 30 நிமிடம் ஊறவைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். இதனை வாரத்திற்கு 3 அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.
பிளாக் டீ மற்றும் காபி
முடியை கருமையாக்க பிளாக் டீயோடு பிளாக் காபியையும் பயன்படுத்தலாம். இதற்கு, காபி பவுடரை 3 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, அதில் மூன்று கருப்பு தேநீர் பைகளை போட்டு நன்கு கொதித்ததும் சிறிது நேரம் ஆறவிடவும்.
அதன் பிறகு, ஒரு பிரஷ்ஷின் உதவியுடன், இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவவும். உங்கள் தலைமுடியில் சுமார் 1 மணி நேரம் விடவும். அதன் பிறகு, உங்கள் தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும்.
பிளாக் டீ மற்றும் துளசி
நரை முடி பிரச்சனையை நீக்க பிளாக் டீயோடு மற்றும் துளசியை பயன்படுத்தலாம். இதற்கு 1 கப் தண்ணீரில் 5 டீஸ்பூன் டீ போடவும்.
அதன் பிறகு, 5 முதல் 6 துளசி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
அதன் பிறகு, கலவையை உங்கள் தலைமுடியில் சிறிது நேரம் விடவும். பிறகு சாதாரண நீரில் முடியை அலசவும்.