பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்! இன்னும் எத்தனையோ பலன்கள் இருக்கு
‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’என்பது பிரபலமான பழமொழி.
அப்படி என்ன மிளகுக்கு சிறப்பு இருக்கிறது என்று பலருக்கு தெரியாது.
‘உணவில் நச்சுத்தன்மை இருந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை கொண்டது மிளகு.
இதனால்தான் ‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என நம் முன்னோர் தைரியம் கொடுத்தார்கள்.
ஆயுர்வேத மருத்துவத்தில் விஷ மாற்று மருந்துகளில்முக்கியமானதாக மிளகு இருக்கிறது. மருந்துகளின் நல்ல சக்தி அதிகமாகவும், கொடுக்கப்படும் மருந்துகளால் நோயாளியின் உடல் பக்கவிளைவால் பாதிக்கப்படாமல் இருக்கவும் மிளகை ஆயுர்வேத மருத்துவர்கள் சேர்க்கிறார்கள்.
இது மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ சிறப்புகள் அந்த சின்னஞ்சிறிய மிளகில் இருக்கிறது.
- ஒரே ஒரு மிளகு போதும் சுவைக்காக.
- இரு மிளகெடுத்து, இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.
- மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்தால் கேசம் அடர்த்தியாக வளரும்.
- நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
- ஐந்து மிளகும், சுக்கும், திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
- ஆறு மிளகெடுத்து, பெருஞ்சீரகம் ( சோம்பு) இழைத்து உண்ண, மூல நோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
- ஏழு மிளகைப் பொடி செய்து, நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால், நல்லபசி எடுக்கும்.
- எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால், வாந்தி கூட எட்டி நிற்கும்.
- ஒன்பது மிளகும், துளசியும், ஒவ்வாமையை துரத்தியடிக்கும்.
- பத்து மிளகை வாயில் போட்டுக் கடித்து மென்று விட்டு பகைவன் வீட்டிலும் பயமின்றி விருந்து உண்ணலாம்.