பேரழிவா….பூமிக்கு வந்து சென்ற ஆபத்து! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
வட அமெரிக்காவின் அலாஸ்கா லேசி மலைப் பகுதியில் வித்தியாசமான மேகம் ஒன்று உருவாகி இருக்கிறது.
இதனை கண்ட அந்தப் பகுதி மக்கள் ஆபத்தின் அறிகுறியான என அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்த மேகங்கள் ஏலியன்களின் விண்வெளி கப்பல்கள் என்று அழைக்கப்படும் UFO பூமிக்கு வந்ததால் ஏற்பட்டதாகவும் மக்கள் கூறி வருகின்றனர்.
ஏழரை சனியால் இந்த ஒரு ராசிக்கு பேராத்து….22 வருடங்களுக்கு பிறகு இந்த ராசியில் சனி பெயர்ச்சி
அச்சத்தில் மக்கள்
வானத்தில் அடையாளம் காண முடியாத அளவில் தென்படும் பொருட்களை UFO என்று அழைக்கிறார்கள்.
UFO என்றால் Unidentified flying object என்று பொருள். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இருந்தே இதுபோன்ற பொருட்களை வனத்தில் பார்த்ததாக பலரும் கூறிவருகின்றனர்.
இவை வேற்றுகிரக வாசிகளின் விமானங்களாக இருக்கலாம் என நம்புவோரும் உண்டு. ஆனால், இவை ஏதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை.
டாணாக்காரன் நடிகர் நடிக்க வரும் முன்னர் என்ன தொழில் செய்தார் தெரியுமா? கைநிறைய சம்பளமாம்…!
என்ன நடந்தது?
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அலாஸ்காவில் உருவான மர்ம மேகம் குறித்து தகவல் தெரிந்தவுடன் அலாஸ்கா பகுதி மீட்புக்குழு ஒன்று சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றது.
விமான விபத்தாக இருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஏதும் நடைபெறவில்லை என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வானத்தில் வித்தியாசமான மேகங்கள் உருவானதாக தகவல்கள் வெளியானதை அடுத்து விசாரணையில் இறங்கிய மீட்புப்படை இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில்," புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட நேரத்தில் ஒரு பெரிய வணிக ஜெட் அந்த பகுதியில் பறந்து கொண்டிருந்தது. நியூயார்க்கில் உள்ள ஜேஎஃப்கே விமான நிலையத்திற்கு சென்ற அந்த விமானம் காலை சூரியனின் வெளிச்சத்தில் மேகம் போல காட்சியளித்திருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.