இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 300 கிலோ வைரம்: கிடைத்தது எப்படி?
இலங்கையின் தலைநகரம் கொழும்பில் 310 கிலோ எடை கொண்ட ரத்தினக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 85கி.மீ தொலைவில் உள்ள ரத்தன்புரா நகரத்தில் உள்ள சுரங்கத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த அரிய ரத்தினக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய இயற்கையான நீல சபையர் (blue sapphire), சுமார் 310 கிலோ எடையுள்ள நிலையில், இதற்கு ஆசிரியாவின் ராணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை அரசின், தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம், இந்த நீல சபையர் கல், மிகவும் மதிப்புமிக்க ரத்தினக் கல் என்றும் சான்றளித்துள்ளது.
ஆனால் சர்வதேச ரத்தின நிறுவனங்கள் இன்னும் இந்த விலையுயர்ந்த ரத்தினக் கல்லுக்கு சான்றளிக்கவில்லை. மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க கூறியதோடும், மேலும் சுத்தமான ரத்தனக் கல் இருக்கக்கூடும் என்பதால் தேடும் பணி தீவிரமாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அலுமினியம் ஆக்சைடு, டைட்டானியம், இரும்பு, நிக்கல் உள்ளிட்டவை ரத்தினக் கல்லில் உள்ளதே இதன் சிறப்பு என ரத்தின நிபுணர் சமிலா சுரங்கா (Chamila Suranga) தெரிவித்துள்ளார்.