பிக்பாஸ் கேடயத்துடன் குருநாதரை சந்தித்த ராஜு: வெளியான அசத்தல் புகைப்படம்
பிக்பாஸ் வெற்றியாளரான ராஜு தனது குருநாதரான பாக்யராஜுவிடம் தான் வாங்கிய கேடயத்தையுடன் சென்று ஆசி பெற்ற புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராஜு ஏகப்பட்ட ரசிகர்களின் மனதினை வென்றார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜு, இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பல குறும்படங்களை இயக்கியதோடு, சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் பல சீரியல்களில் நடித்து வருகின்றார்.
இதில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி என்ற ரோலில் நடித்து வரும் நிலையில், பிக்பாஸ் மூலம் பலரின் மனதையும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட இவரைப் பற்றி சர்ச்சையான கருத்துக்களை எதுவும் வெளியாகாதது இவரின் இமேஜை மேலும் உயர்த்தியது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் பட்டம் வென்ற இவருக்கு, சினிமாவில் இயக்குநர் வாய்ப்பு கதவை தட்டிக்கொண்டிருக்கிறது.
சினிமா வாய்ப்புகள் தற்போது குவிந்து வரும் நிலையில், சீரியலில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் சாம்பியன் ராஜூ பிக்பாஸ் கேடயத்துடன் தனது குருநாதர் பாக்யராஜூவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் டாக்டர் மற்றும் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் இயக்குநர் நெல்சனிடமும் பிக்பாஸ் சாம்பியன் ஷிப்பை காண்பித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜூ, தனக்கு இயக்கம் கற்றுக்கொடுத்த ஒருநாதர்களில் நெல்சனும் ஒருவர் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நெல்சனை சந்தித்து பிக்பாஸ் வெற்றி குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பீஸ்ட் படத்தின் அப்டேட் கிடைக்காமல் தவித்து வரும் விஜய் ரசிகர்கள், ராஜூவிடம் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வருகினறனர்.