பிக்பாஸ் தாமரையை சுற்றி வளைத்த ரசிகர்கள்: நெகிழ வைத்த தருணம்! வைரல் காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை கோவிலுக்கு சென்று திரும்பி வருகையில் ரசிகர்கள் சுற்றி வளைத்து செல்பி எடுத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்கள் வரை நின்று விளையாடியவர் தான் நாடக கலைஞர் தாமரை.
ஆரம்பத்தில் விளையாட்டு புரியாமல் தவித்து கண்களில் கண்ணீர் ததும்பிய இவர் நாட்கள் செல்ல செல்ல தன்னிச்சையாக விளையாட ஆரம்பித்தார். கிராமத்தில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இவருக்கு ஆங்கில மொழி பேச்சு இடையூராக இருந்து வந்த நிலையில், சக போட்டியாளர்கள் இதனை எளிதாக புரிய வைத்தனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமரை பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சிபி வெளியேறினார்.
குறித்த பணத்தினை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு தாமரை, தான் இந்த பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால், எனது சுயநலத்திற்காக விளையாடியதாக தோன்றும். என்னை நம்பி வாக்களிக்கும் மக்களை ஏமாற்ற விருப்பமில்லை என்று பதில் அளித்தார்.
இந்நிலையில் தாமரை கோவிலுக்கு சென்று திரும்பிய போது அவரை ரசிகர்கள் அவதானித்து, அன்பை பொழிந்து செல்பி எடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...