மன்னிப்பு கேட்க தகுதி இல்ல.. கடுமையாக விளாசும் Housemates- பதில் கொடுக்க முடியாமல் மஞ்சரி
பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க் போட்டியாளர்கள் தலையில் இடியாக விழுந்துள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பரான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 8.
இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கி, இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் அதன் பிறகு வாரந்தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றி வருகிறார்.
இதையடுத்து டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும் வகையிலும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையிலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எப்போதும் இல்லாத வகையில் டாஸ்க்கள் சூடுபிடித்து, போட்டியாளர்கள் இடையில் சண்டையை ஏற்படுத்தி வருகின்றது.
பிக்பாஸ் வீட்டில் நடந்த மாற்றம்
இந்த நிலையில், இன்றைய தினம் ஏஞ்சல்கள் பேய்களாகவும், பேய்கள் ஏஞ்சல்களாகவும் மாறி டாஸ்க் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் பேய்களாக ஏஞ்சல்களை செய்த கொடுமைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் ஏஞ்சலாக மாறி, கொடுமை செய்த போட்டியாளர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார்கள். அதற்கு ஏற்றால் போல் பேய்களும் பழிவாங்கும் வகையில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |