பிக்பாஸில் அதிரடி எண்ட்ரி கொடுத்த சஞ்சீவ்: கணவர் குறித்து பயத்தில் மனைவி வெளியிட்ட காணொளி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற சஞ்சீவைக் குறித்து அவரது மனைவி நடிகை பிரீத்தி கூறியுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 53 நாட்களை கடந்து பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதுடன், புதிய போட்டியாளர்களும் உள்ளே களமிறங்கியுள்ளனர்.
நாட்கள் செல்ல செல்ல போட்டிகளும், சவால்களும் அதிகமாகி வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் வன்மம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், வார வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்து வருகிறது.
அந்த வகையில் 18 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8 பேர் எலிமினேட் ஆகி தற்போது இரண்டு பேர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வந்து இருக்கிறார்கள். இரண்டாவது எலிமினேட் ஆன அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு நடனக் கலைஞர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாகிய நிலையில், இவரைத் தொடர்ந்து நேற்று நடிகர் சஞ்சீவ் உள்ளே சென்றுள்ளார்.
இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில் என் கணவரை வெளியே இருக்கும் போது எப்படி ரசித்துக்கொண்டு இருந்தேனோ, அதேபோல் பிக்பாஸ் வீட்டிலும் அவர் இருப்பதை ரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தலையெழுத்து எப்படி மாறப்போகிறது என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.