நடிகர் பாக்கியராஜை வாட்டி வதைத்த மாரடைப்பு! இதன் அறிகுறி எப்படி காட்டும்?
நடிகர் பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதன் அறிகுறிகள் தெரிந்திருப்பது அவசியம்.

மாரடைப்பு
தற்போது பலரும் மாரடைப்பால் நிற்கும்போதும், உட்காரும்போதும், அல்லது நடனமாடும்போதும் திடீரென உயிரிழக்கின்றனர். அந்த அளவிற்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.
ஆய்வின்படி ஒரு மனிதன் 35 வயதை கடந்த உடனேயே மாரடைப்பு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதய நோயின் ஆரம்பத்தில் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாதவையாக இருப்பதால், சுகாதார நிபுணர்கள் தற்போது ஒவ்வொருவருக்கும் 19 வயதிலிருந்தே இதயப் பரிசோதனைகளை செய்ய பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் இதற்கு பரிசோதனை மட்டும் போதாது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் போன்றவற்றையும் நம் உடலில் கட்டுப்படுத்த வேண்டும்.
அதிகரித்த மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவை கூட மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.
மார்பின் நடுப்பகுதியில் கடுமையான அழுத்தம் அல்லது வலி, அந்த வலி இடது கை, தோள், கழுத்து, தாடை அல்லது முதுகுக்குப் பரவுதல், அதிக வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி உணர்வு, தலைச்சுற்றல் போன்றவை முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது.

மாரடைப்பு வர முக்கிய காரணி என்னவென்றால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், புகைப்பிடித்தல், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், அதிக மனஅழுத்தம், தூக்கமின்மை மற்றும் பரம்பரை காரணிகள் ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும்.
நடிகர் பாக்கியராஜ் மாரடைப்பு வந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒருவேளை இவருக்கு அறிகுறிகள் காட்டி இருக்க கூடும் அவர் அதை புரக்கணித்திருக்கலாம் எனவே மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளை அறிந்து நடப்பது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |