சமையலில் அசத்த வேண்டுமா? அப்போ இந்த மாதிரி சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!
பொதுவாகவே விதவிதமான சமையல் செய்து சாப்பிடுவது என்றால் அனைவருக்குமே பிடிக்கும். சமையல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.
ஆனால் நாம் வீடுகளில் அன்றாடம் சமையலின் போது, பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

சில சமயம் அதற்கு தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என நாம் சிந்தித்திருக்ககூடும். குறிப்பாக சமையல் செய்ய ஆரம்பித்தவுடன் சில முக்கியமாக பொருட்கள் சமையலறையில் இருக்காது.
அவ்வாறான நேரங்களில் எவ்வாறு வேறு மாற்றீடுகளை வைத்து அதே சுவையை கொண்டுவருவது என்று பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை.

இவ்வாறு நாம் அன்றாடம் சமையலறையில் சந்திக்கும் ஒரு சில முக்கிய பிரச்சினைகளுக்கான எளிமையன தீர்வு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எளிமையான தீர்வுகள்
பெரும்பாலானவர்கள் சமையலின் போது, கிரேவி கெட்டியாக இருக்க தக்காளியை அதிகம் சேர்த்துக்கொள்வார்கள்.
இப்படியானவர்கள் தக்காளி இல்லாத போதும் தங்களின் சுவை பழக்கத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க மல்லித் தூளைப் பயன்படுத்தலாம்.
சிறிது மல்லி விதைகளை வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்தால் கிரேவி கெட்டியாகி அதன் சுவையும் அதிகரிக்கும்.

சில நேரங்களில் நாம் ஆசையாக சமைத்த குழம்பில் ஊப்பு அதிகமாகிவிடும். அவ்வாறான நேரங்களில் குழம்பை வீணாக்காமல், ஒரு உருளைக்கிழங்கை வெட்டி குழம்பில் போட்டு 30 நிமிடங்கள் கழித்து சாப்பிட்டால் குழம்பில் உப்பு சரியாக இருக்கும்.
சமையலின் போது, கறிவேப்பிலை இல்லை என்றால், அதற்கு பதிலாக எலுமிச்சை இலைகளைப் பயன்படுத்தலாம். இது உணவின் சுவையையும் மேம்படுத்துகின்றன. மேலும் ஒரு நல்ல நறுமணத்தையும் கொடுக்கும்.

தேநீர் அல்லது குழம்பில் வழக்கத்துக்கு மாறாக சற்று சுவையை அதிகரிக்க விரும்பினால்,எலுமிச்சை இலைகள் ஒரு நல்ல தெரிவாக இருக்கும் லேசான மற்றும் நறுமணச் சுவையைக் கொண்டுள்ளன, இது உணவுக்கு ஒரு புதிய ஃபிளேவரை கொடுக்கும்.
சமையலின் போது, எலுமிச்சை இல்லை என்றால், அதற்கு பதிலாக உலர்ந்த மாங்காய் பொடியை அல்லது. புளி விழுதையும் பயன்படுத்தலாம். உலர்ந்த மாங்காய் பொடியை சமையில் பயன்படுத்தும் போது இது வழக்கத்தை விட சற்று கூடுதல் சுவையை கொடுக்கும்.

தேநீர் போடும் போது, இஞ்சிக்குப் பதிலாக இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துங்கள்.இஞ்சி தீர்ந்துவிட்டால், ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது இஞ்சிக்கு நிகரான புத்துணர்ச்சியையும், சுவையையும் கொடுக்கும்.

சாதம் சமைக்கும் போது, உதிரியாக இருக்க வேண்டும் என்று தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். அப்படியானவர்கள் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்துவது சாதம் ஒட்டாமல் இருக்க உதவிசெய்யும். பாஸ்மதி அரிசியை வேகவைக்கும்போது தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்க்கவும். இது அரிசியை மென்மையாக வைத்திருக்கவும், ஒட்டாமல் தடுக்கவும் உதவுகிறது. இந்த முறை குறிப்பாக பாஸ்மதி அரிசியை சமைக்கும் போது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |