செலவே இல்லாம முகப்பருவுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்!
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் தனித்துவமாக ஈடுபாடு இருப்பது இயல்பான விடயம் தான்.
குறிப்பாக தங்களுடைய முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

அதிலும் முக அழகைக் மோசமாக பாதிக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு பெரும் பிரச்சினைதான் இது பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனையாகும்.
முக அழகை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் என பலரும் பல வழிகளை பின்பற்றுவார்கள். சிலர் இதற்காக மொத்த சம்பளத்தையும் கூட செலவிட தயங்கவே மாட்டார்கள்.

ஆனால் குறைந்த செலவில் வீட்டிலேயே இயற்கை பொருட்களை பயன்படுத்தி எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி எவ்வாறு முகப்பரு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எளிய வீட்டு வைத்தியங்கள்

1. கற்றாழை ஜெல்: கற்றாழை அதன் குளிர்ச்சியான மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது, இது முகப்பரு மற்றும் வடுக்கள் இரண்டிற்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
இது வீக்கத்தை அமைதிப்படுத்தி குணப்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.
எப்படி பயன்படுத்துவது
புதிதாக பறித்த ஒரு கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை எடுத்து மாய்ஸ்சரைசராக சருமத்தில் நேரடியாக தடவவும்.
இரவு முழுவதும் அதை அப்படியே விட்டுவிட்டு காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் புத்துணர்வு பெருவதுடன் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை பயன்படுத்தினால் முகப்பருக்களும் அதனை வடுக்களும் இருந்த இடம் தெரியாமல் மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.
நன்மைகள்
முகப்பருவால் சருமத்தில் ஏற்படும் சிவப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது. தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வடுக்கள் மறைகின்றன. துளைகளை அடைக்காமல் ஈரப்பதமாக்குகிறது. அதனால் சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்கும்.

2. மஞ்சள் மற்றும் தயிர் மாஸ்க்: மஞ்சளில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, அதே நேரத்தில் தயிர் சருமத்தை ஈரப்பதமாக்குவதுடன் பொலிவாகவும் மாற்றும் தன்மையை கொண்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது
ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும் 2 தேக்கரண்டி தயிரையும் நன்றாக கலந்து இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் முழுமையாக தடவி 15-20 நிமிடங்கள் ஊற வைத்து குளிந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.
நன்மைகள்
அதனை பயன்படுத்துவதால், முகப்பருவால் சருமத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவப்வு குறைக்கிறது. மேலும் சருமத்தையும் பிரகாசமாக்குவதுடன் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களைவும் விரைவில் மறைய செய்யும்.

3.எலுமிச்சை சாறு மற்றும் தேன்: எலுமிச்சை சாறு இயற்கையான ப்ளீச்சாக செயல்படுகிறது, அதே நேரத்தில் தேன் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கும் சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும் தன்மைக்கும் பெயர் பெற்றது. எனவே இது முகப்பருக்களை அகற்றுவதில் ஆற்றல் காட்டுகின்றது.
எப்படி பயன்படுத்துவது
ஒரு சிறிய கிண்ணத்தில் புதிய எலுமிச்சை சாறு மற்றும் தேனை சம பாகங்களாக எடுத்து நன்றாக கலந்து வடுக்கள் மற்றும் முகப்பருக்கள் உள்ள இடங்களின் மீது தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் முகப்பருக்கள் வருவது குறைவடையும்.
நன்மைகள்
அதில் உள்ள இயற்றை ப்ளீச் பண்புகள் கரும்புள்ளிகளை ஒளிரச் செய்கிறது.மேலும் எலுமிச்சை மற்றும் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் புதிய முகப்பருக்கள் வருதை தடுக்க உதவும்.
(குறித்த வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தும் முன்னர் உங்களின் சருமத்தின் பாதுகாப்பு கருதி எச்சரிக்ககையாக இருக்க வேண்டியதும் அவசியம் அதிக உணர் திறன் கொண்ட சருத்துக்கு இது பொருந்தாது எங்களின் நோக்கம் தகவல் வழங்குவது மாத்திரமே)
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |