நானும் மனுஷன் தான்.. இதுக்கு மேல தாங்க முடியாது.. சூப்பர் சிங்கரை விட்டு அதிரடியாக விலகி பரபரப்பை ஏற்படுத்திய நடுவர்
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரபல பின்னணி பாடகரும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயாள் அதிரடியாக அறிவித்து இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ஸ்ரீதர் சேனா எனும் போட்டியாளரை நடுவர்கள் வெளியேற்றியதற்கு எதிராக ஏகப்பட்ட சூப்பர் சிங்கர் ரசிகர்கள் இவரை உண்டு இல்லை என ஆக்கி உள்ளனர்.
டைட்டில் வின் பண்ணும் அளவுக்கு ஸ்ரீதர் சேனாவுக்கு திறமை இருப்பதாக பாராட்டி விட்டு திடீரென வெளியேற்றினால் என்ன அர்த்தம் என்று விளாசி உள்ளனர்.
இந்த நிலையில், அடுத்த சீசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அதிரடியாக பென்னி தயாள் அறிவித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்பாக இனி எந்தவொரு அறிவிப்பையும் சமூக வலை தளங்களில் வெளியிடப் போவதில்லை என்றும், நானும் மனுஷன் தான் இப்படி தொடர்ந்து என்னைப் பற்றி மோசமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருவதை பார்த்து என்னால் சுமமா இருக்க முடியாது என சோஷியல் மீடியா புல்லிங்கிற்கு எதிராக கொதித்து எழுந்து இருக்கிறார்.