பெண்களின் அழகையும், ஆரோக்கியத்தையும் மெருகூட்டும் மருதாணி இலைகள்
பெண்கள் விழாக்களுக்கு செல்லும் போது மருதாணி போடுவது வெறும் அழகுக்காக என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறாகும்.
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைப்பதனால் பெண்கள் நிறைய நன்மைகள் அடைகிறார்கள்.
அந்த வகையில் மருதாணியின் மகத்துவம் தொடர்பாக தெரிந்துக் கொள்வோம்.
பெண்கள் மருதாணி போடுவதன் காரணம்
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணிந்து பெண்களின் உடல் வெப்பநிலை கட்டுபடுத்தப்படும் சிலருக்கு குடும்ப பிரச்சினையால் மனழுத்தம் அதிகமாக காணப்படும்.
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வந்தால் மனநோய் பிரச்சினைகள் குறையும், இப்படியான பிரச்சினைகளிலிருந்து விடுபெறுவதற்கும் சிலர் மருதாணி போடுவார்கள்.
மருதாணியின் மருத்துவ குணம்சங்கள்
ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மருதாணி இலையை அரைத்து ஒற்றைத் தலைவலி உள்ள பக்கத்தில் பற்றுப்போட உடனடியாக ஒற்றைத் தலைவலி தீரும் மற்றும் மருதாணி வேரை நசுக்கிப் பிழிந்து சில துளி சாற்றினை காதில் விட காது வலி தீரும்.
உள்ளங்கால் எரிச்சலுக்கு மருதாணியை அரைத்து எலுமிச்சம்பழச் சாற்றுடன் கலந்து தடவி வந்தால் குணமாகும் மற்றும் மருதாணி இலையை பசும்பாலில் ஊற வைத்து 6 நாட்கள் சாப்பிட்டு வர பித்த வெடிப்புக் குணமாகும்.
சிறிய காயம், அடிபட்ட சிராய்ப்புகளுக்கு மருதாணி இலையை அரைத்து நீரில் கரைத்து அந்த நீரை அடிபட்ட சிராய்ப்பு இவற்றை கழுவி வர விரைவில் குணமாகும் மற்றும் சுளுக்கு, நகப்புண், காயம் முதலியவைக்கு மருதாணி இலையை அரைத்துப் பூசினால் குணமாகும்.
சிலருக்கு மழைக்காலத்தில் காலில் சேற்றுப் புண் பிரச்சினை ஏறபடும் இதனை சரிசெய்வதற்கு மருதாணி சிறந்த தீர்வாக அமையும்.