பனி, கடல், மணல் அட்டகாசமான சங்கமம்! லைக்ஸை குவிக்கும் அற்புதமான கடற்கரையின் படம்
கடல் மற்றும் பனி இவற்றிற்கு இடையே மணல் என சங்கமமான அற்புத கடற்கரை புகைப்படம் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகின்றது.
வைரல் புகைப்படம்
பொதுவாக கடலின் அழகை ரசிக்காத நபர்களே உலகில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு கடலையும், அதன் அலைகளையும் ரசிக்கும் மகிழ்ச்சியே தனி தான்.
ஜப்பான் கடற்கரை ஒன்றில் பனி, மணல், கடல் ஆகியவை ஒரே இடத்தில் சந்திப்பதை காணலாம். ஜப்பானின் மேற்கு கடற்கரையில் இந்த சிறப்பான சம்பவம் காணப்படுகின்றது.
சானின் கைகன் ஜியோபார்க்கில் என்ற புகைப்படக் கலைஞர் ஹசாவால் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது. சுமார் 18 ஆயிரம் லைக்ஸை பெற்றிருக்கும் இந்த புகைப்படத்தின் அழகு இதோ...